Sunday, July 1, 2012

வார்த்தை விளையட்டு

இரு விழி
தொடு வானம்
ஒற்றைச் சிறகு
மரத்தடி
தூறல்
கற்பனை
பட்டினி
கண்ணாடிச் செருப்பு
காதல்
பின்னிரவு
தொடர்தல்
நிலவு
மொழி
கூந்தல்
பட்டாம்பூச்சி
அடடா!
அற்புதமான கவிதை
என்றான் நண்பன்!
வார்த்தை விளையாட்டுக்காக
எழுதி வைத்திருந்த
சொற்களைப் பார்த்து!

மீண்டும்....!

எப்படியோ ஒரு வழியா மீண்டும் பிளாக் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்!

என்ன எழுதுவேன், எப்படி எழுதுவேன்னு எனக்கே தெரியாது!

ஆனா எழுத வேண்டிய நேரத்துல கரெக்டா எழுதுவேன்!

பழைய ஃபார்முக்கு வர கொஞ்ச நாள் ஆகலாம்!

அதுவரைக்கும் வெயிட்டீஸ்!

இது ச்சும்மா ஸ்டார்ட்டிங்க் போஸ்ட்தான்!


விரைவில்,
அமளிதுளியாக்கும் ஆவலுடன்,
உங்கள்,
நாமக்கல் சிபி.