tag:blogger.com,1999:blog-55019385374889451282024-02-07T16:39:02.285-08:00மீண்டும் சிபிநாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5501938537488945128.post-47571647157099169012015-04-02T11:18:00.000-07:002015-04-02T11:18:34.486-07:00சின்ன வயசுலே ரொம்பச் சின்ன வயசுலே...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ரொம்ப நாள் கழிச்சி மீண்டும் வலைப்பூவில் எழுதுகிறேன். டச் விட்டுப் போனதில கொஞ்சம் ஆங்காங்கே ஜெர்க் ஆகலாம். மனிதாபிமானத்தோட மன்னிச்சிட மக்கழே!<br />
<br />
*****************************************************************************<br />
<br />
கிபி..1980 மணியனூர், நாமக்கல் மாவட்டம்.<br />
<br />
எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து எனக்கு கிடைச்ச முதல் ஃபிரண்ட் ஸ்ரீதர். அவனோட அப்பா ஒரு போஸ்ட் மாஸ்டர். அவங்க வீட்டுலயேதான் போஸ்ட் ஆஃபீசும். அவங்க வீட்டு வாசலுக்கு ரெண்டு பக்கமும் பெரிய திண்ணைகள். இடது புறம் இருக்கும் திண்ணைல ஒரு பெரிய மரத்தாலான மேசை இருக்கும். போஸ்ட் ஆபீஸ் மேசை. நல்ல கனமா இருக்கும். ஒரு பக்கம் கப்போர்ட் வெச்சது. மறுபுறம் அடில காலியா இருக்கும். அதுதான் எங்களுக்கு(எனக்கும் ஸ்ரீதருக்கும்) கார்.<br /><br />லீவு நாட்களில் அங்கேதான் விளையாடுவோம். டக் டக் என்று காரின் கதவுகளை திறந்து மூடும் சப்தங்கள் எல்லாம் பிரசாத் ஸ்டுடியோ இல்லாமலே எங்கள் வாயாலேயே டப்பிங்க் செய்து கொள்வோம்.<br />
<br />
இந்த விளையாட்டு எவ்ளோ நாள் விளையாண்டாலும் எங்களுக்குப் போரடிச்சதில்லை. இருப்பினும் எங்களுக்கு ஒரு நாள் திடீர்னு புது விளையாட்டு கிடைச்சது.<br />
<br />
திண்ணை மேல இருந்து தண்ணீர் சேந்தும்(கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும்) விளையாட்டு. ஒருத்தர் திண்ணைக்குக் கீழே படுத்துக்கணும். திண்ணை மேலிருந்து ஒருத்தர் தண்ணீர் இறைக்கணும். அப்போ கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துட்டு ஐயய்யோ கிணத்துக்குள்ளே பொணம் கிடக்குதுன்னு கத்திகிட்டு ஓடணும்.<br /><br />சில நாட்கள் நான் பிணமாகவும் சில நாட்கள் அவரு பிணமாகவும்னு மாறி மாறி விளையாடுவோம். ஒரு முறை சந்தைல இருக்கும் பொதுக் கிணற்றில் பிணம் மிதக்குதுன்னு ஊர் பூரா பேசிகிட்டத்தைக் கவனிச்ச சிறுசுங்க மனசுல விசுவலைஸ் பண்ணி உருவாக்கின விளையாட்டு இது.<br />
<br />
அப்புறம் அப்படி இப்படின்னு என்னைப் பால்வாடில சேர்த்து விட்டாங்க. ஸ்ரீதர் ஒண்ணாவது. நான் பால்வாடி. அவரு என்னை விட ஒரு வருஷம் சீனியராம். எனக்கு அந்தப் பால்வாடில இருக்குற ஆயாவைக் கண்டா எப்படி இருக்குமோ தெரியாது.. வீல்னு கத்திகிட்டே பின்னங்கால் பிடறி பட ஓடியாந்துடுவேன்.<br /><br />
<br />
ஒரு வேளை குழந்தையா இருந்தப்போ நான் குறும்புகள் செய்யும்போது பால்வாடி ஆயாகிட்டே பிடிச்சிக்குடுத்துவோம்ணு பயமுறுத்தி வெச்ச விளைவுகளா இருக்கலாம். இப்போ நினைச்சா பாவமா இருக்கு. அஞ்சலிப் பாப்பாவை அணுக முயற்சிக்கும் ரேவதியா உணர்ந்திருப்பாங்களோன்னு. <br />
<br />
எவ்ளோ முயற்சி பண்ணியும் என்னை பால்வாடில உக்கார வெக்க முடியலை. நாலைஞ்சு பேரு சேர்ந்து கையை ரெண்டு பேர் காலை ரெண்டு பேர் எல்லாம் பிடிச்சிப் பால் வாடில கொண்டுபோயி விட்டுட்டு வந்தாக் கூட அவங்க வந்து சேர்வதற்குள் நான் திரும்ப வந்து சேர்ந்திருப்பேன். <br /><br />சரிதான் இவனுக்கும் பால்வாடிக்கும் ஸ்நானப் ப்ராப்திகூட இல்லைபோலன்னு எங்கப்பா என்னை ஒண்ணாம் வகுப்புல போயி உக்கார வெச்சாரு. எங்கப்பாதான் அந்த ஸ்கூல்ல(ஆர்.சி.துவக்கப்பள்ளி, மணியனூர்) தலைமை ஆசிரியர். புலி அட்டைப் படம் போட்ட தமிழ் புக்கும் ஒரு ஸ்லேட்டும் ஒரு மஞ்சப் பைல போட்டு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வெச்சாங்க. பக்கத்து வீட்டில் இருக்கும் சந்தை வாட்ச்மேனோட பொண்ணு சம்பூர்ணாக்காதான் முத முதல்ல ஸ்கூலுக்கு போறே, கோயிலுக்கு போயிட்டு போலாம்னு விபூதியெல்லாம் பூசி அனுப்பி வெச்சாங்க. அப்போ எனக்கு தெரியாது இது அஃபிஷியல் அட்மிஷன் இல்லை. ஒப்புக்குச் சப்பாணின்னு.<br />
<br />
<br />
.... தொடரும்.</div>
நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5501938537488945128.post-14189970373280015482014-06-03T13:18:00.001-07:002014-06-03T13:18:21.127-07:00எலிஜிபிள் பேச்சிலர்ஸ் க்கான 10 டிப்ஸ் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
1.மனைவியாக வருபவர்க்கு நாம் மட்டுமே உலகம். அவர் பேசுவதை காது கொடுத்து கேட்க நாம் மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள். எப்ப பார்த்தாலும் நொய்யி நொய்யின்னு உயிரை எடுக்கிறாள் என்று தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். <br /><br />2. திருமணத்திற்கு முன்பு/திருமணமான புதிதில் எவ்வளவு ஆசையாகவும்/அனுசரணையாகவும் அவரிடம் எப்படிப் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். திருமணமான சில நாட்களில் அவ்வாறு பேசுவதை உடனடியாக/ஒரே அடியாக குறைக்காதீர்கள். <br />அப்படிப் பேசிக் கொண்டிருப்பதும் யதார்த்த வாழ்க்கையில் சாத்தியமில்லை என்பதை அவர்களே புரிந்து கொள்ளும் வரை கொஞ்சம் பொறுத்துக் கொண்டிருங்கள். <br /><br />3. திருமணத்திற்கு முன்பு வரை உங்கள் வீட்டினருடன் குறிப்பாக உங்கள் அம்மாவிடம் அதிகமாக அளவளாவி இருந்திருப்பீர்கள். புது உறவு வந்தவுடன் அவர்களிடம் பேசுவதையும் உடனடியாக குறைத்து விடாதீர்கள். திடீரென்று பேச்சு வார்த்தை குறைந்தால் புதுசா வந்தவ என் புள்ளையை என்னிடம் இருந்து பிரிச்சிக் கொண்டு போயிட்டா என்றெல்லாம் எண்ணம் வரக் கூடும். அது அவர்களிடையே இருக்கும் உறவை சிக்கலாக்கி விடக் கூடும். இருவருடனும் திடீர் இடைவெளி ஏற்படாதவாறு சமயோசிதமாக பார்த்துக் கொள்ளுங்கள்! <br /><br />4. ஒரு போதும் உங்கள் வீட்டு பழைய பிரச்சனைகளை / பிரச்சினைக்குரிய நிகழ்வுகளைப் பற்றி உங்கள் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அதே போல அவர்கள் வீட்டு பழைய விஷயங்களிலும் அதீத ஆர்வம் காட்டாதீர்கள். ஜஸ்ட் லிசன். <br /><br />5. நாளடைவில் அப்படி/இப்படி என்று மனைவி - மாமியாருக்குள் ஒருவருக்கொருவர் குறை சொல்லத் துவங்கக் கூடும். உடனடியாக நீங்கள் ரியாக்ட் செய்யத் தேவையில்லை. நீங்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டு பிறகு விட்டு விட வேண்டும். நீங்கள் ஒருவேளை தலையிட்டு பெரிது படுத்தி விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான். அடுத்த நாள் காலையிலேயே அவர்களிருவரும் அன்னியோன்யமாக ஆகி விடுவார்கள். நீங்கள் எங்கேனும் ஹோட்டலை தேட வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்.<br /><br />6. உங்கள் மனைவியின் வீட்டு உறவினர்களையும் உங்கள் வீட்டு உறவினர்களைப் போலவே மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நீங்கள் உபசரிப்பதில்தான் உங்கள் மனைவியிடம் இருந்து உங்களுக்குக் கிடைக்கும் உபசரிப்பு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். <br /><br />7. மனைவியின் முன்னாள் அம்மாவின் சமையலையோ அம்மாவின் முன்னால் மனைவியின் சமையலையோ பெரிதும் புகழ்ந்து பேசி பாராட்டிக் கொண்டிருக்காதீர்கள். புத்திசாலித்தனமாக என் அம்மாவின் கைப்பக்குவம் போலவே அருமையாக இருக்கிறதென்று சொல்லிவிடலாம். ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பேசி ஒருவரை மட்டம் தட்டுவது போன்ற உரையாடல்களை முற்றிலுமாகத் தவிர்த்து விடுங்கள். <br /><br />8. முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய சமயங்களில் இருவரிடமும் ஆலோசனை கேளுங்கள். ஆனால் முடிவுகளை கூடுமானவரை நீங்களே எடுங்கள். <br /><br />9. வீட்டிற்கு பலகாரங்கள் வாங்கி வரும்போது "அவ உங்களுக்காக வாங்கி வரச் சொன்னா" என்று அம்மாவிடமும், "அம்மா உனக்கு பிடிக்குமேன்னு வாங்கி வரச் சொன்னாங்க" என்று உங்கள் மனைவியிடமும் சொல்லிக் கொடுங்கள். பொய்யென்று தெரிந்தாலும் ஒரு கணம் அவர்கள் மனதில் மகிழ்ச்சி இழையோடும். <br /><br />10. அம்மாவிடம் "அசடு/பொண்டாட்டி தாசன்" என்றோ மனைவியிடம் "சரியான அம்மாஞ்சி/அசமஞ்சம்" என்றோ பெயரெடுப்பதைப பற்றி கவலை கொள்ளாதீர்கள். அதுதான் நிம்மதியான வாழ்க்கை. நாளடைவில் அது உங்களுக்கு வைக்கப் பட்ட செல்லப் பெயராகக் கூட மாறலாம். <br /><br /></div>
நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5501938537488945128.post-71103537857142650142013-08-08T07:55:00.001-07:002013-08-08T07:55:50.443-07:00வளஞ்செய்கின்றன!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
இந்த <b>வளஞ்செய்கின்றன </b> என்ற வார்த்தைக்குப் பின்னால் ஒரு பிளாஷ் பேக் இருக்கு! <br />நான்
நாலாம்பு அட்மிஷனுக்கு நாமக்கல் டவுன் இஸ்கூலுக்கு வந்தப்போ கிராமத்துல
படிச்ச பையன் சரியா படிக்க மாட்டான் என்று சொல்லி எங்க இருதய மேரி டீச்சர்
தன வகுப்புல சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இத்தனைக்கும் என்
அம்மா, என் அப்பா இருவருமே அதே நிர்வாகத்தின் பள்ளியில் ஆசிரியர்கள். நான்
சேர வந்த டவுன் இஸ்கூலுக்குத்தான் அன் அம்மாவுக்கும் டிரான்ஸ்பர் ஆகி
இருந்தது. சக டீச்சரோட பையன் என்று கூட பார்க்காம எங்க டீச்சர் தன்னுடைய
குவாலிட்டில கறாரா இருந்தாங்க. <br /><br />இருப்பினும் டவுன் இஸ்கூலின் தலைமை
ஆசிரியர் சத்தியநாதன் அவர்கள் கொஞ்ச நாளுக்கு உங்க கிளாஸ்ல இருக்கட்டும்.
அதன் பிறகும் பையன் தேறலைன்னா வேற கிளாஸ்க்கு மாத்தி விடுறேன் என்று சமாதானப் படுத்தி அனுப்பி வெச்சார் <br /><br />நான்
சேர்ந்த இரண்டாம் நாளோ அல்லது மூன்றாம் நாளோன்னு நினைக்கிறேன். சேர்த்து
எழுது என்ற பகுதியில் வளம் + செய்கின்றன இதுக்கு விடை என்ன வரும்னு கேட்டாங்க.
வகுப்பே முழிச்சது. அவங்க பார்வைல நல்லாப் படிக்கும் நகரத்துப் பசங்ககிட்டே
எல்லாம் கேட்டாங்க. எவனுக்கும் தெரியல. நான் தானா முன்வந்து கையை
உயர்த்தினேன், <br />எங்கே சொல்லு பார்க்கலாம் என்று சொன்னாங்க
"வளஞ்செய்கின்றன" என்றேன். வெரிகுட் என்று என்னைப் பாராட்டி பசங்க அத்தனை
போரையும் கை தட்டச் சொன்னாங்க. </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNn3J8G8y4LOTEPQJq4TPfuW_8Vz8SpfAgSqpO3xuJkzTI8J0HoIByiAIS_TZv1xjXLSxDCAILuUAf_jzoapBj_XwTeIybjrj95gddPDuGUsclMMtE8-SZYofm-b7AVtc7IT26zvMcu8n7/s1600/studentno1.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNn3J8G8y4LOTEPQJq4TPfuW_8Vz8SpfAgSqpO3xuJkzTI8J0HoIByiAIS_TZv1xjXLSxDCAILuUAf_jzoapBj_XwTeIybjrj95gddPDuGUsclMMtE8-SZYofm-b7AVtc7IT26zvMcu8n7/s1600/studentno1.jpeg" /></a></div>
<div style="text-align: justify;">
<br /><br />அடுத்த வாரத்தில் ஒரு நாள் துணிக்
கடைக்கு ஆங்கிலத்தில் என்ன என்று ஒரு கேள்வியைக் கேட்டுட்டாங்க. அதே போல
அத்தனை பசங்களும் முழிக்க என் ஞாபகச் செல்களை உசுப்பி விட்டேன்.
திருச்செங்கோடு கடைவீதியில் அப்பாவின் கை பிடித்துக் கொண்டு நடந்த நாட்கள்
நினைவில் வந்தது. அப்போவெல்லாம் வேடிக்கை பார்க்கும்போது கடையின்
பெயர்ப்பலகைகளை படித்துக் கொண்டே போவது வழக்கம். பல கடைகளின் பெயர்களை
ஆங்கிலத்தை தமிழில் எழுத்தில் இருப்பார்கள். அப்படி ஒன்றை படித்த பெயர்
சட்டென நினைவில் வந்தது "முருகன் கிளாத் ஸ்டோர்". <br /><br />இன்றும் நானாக
கையை உயர்த்தினேன். முதல் ஆளாக. "கிளாத் ஸ்டோர்" என்ற விடையைச் சொல்லி
கைதட்டு வாங்கினேன். அதன் பிறகு தலைமை ஆசிரியடம் சென்று வேறு வகுப்புக்கு
மாற்ற வேண்டாம், என் கிளாசிலேயே இருக்கட்டும் என்று தக்க வைத்துக்
கொண்டார்கள் வகுப்பின் முதல் மாணவனை. </div>
</div>
நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5501938537488945128.post-47943709133082660422013-08-02T13:18:00.001-07:002013-08-04T10:19:59.608-07:00காட்டு வழிப் பாதை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9Lp0FAz_9ZbQqFsnxjNV4psBMsCFfse6SHbfW5f_MUoLls4pRXGUR1oVcB8fbLQtYsCRbj5Cwtq34-mrmBtiOwqsTAVR0hakpYAewXihKWOUoxEpLtUPG842DPAhs_4zRUfzBwYuuf4k9/s1600/forest.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9Lp0FAz_9ZbQqFsnxjNV4psBMsCFfse6SHbfW5f_MUoLls4pRXGUR1oVcB8fbLQtYsCRbj5Cwtq34-mrmBtiOwqsTAVR0hakpYAewXihKWOUoxEpLtUPG842DPAhs_4zRUfzBwYuuf4k9/s1600/forest.jpg" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
"சேகர்! கவனமாகக் கேள்! இரவு 12.33 மணிக்குள் நீ அவ்விடத்தைக் கடந்துவிட்டிருக்க வேண்டும்! ஒரு நொடி தாமதித்தாலும் இக்குறிப்பிட்ட நட்சத்திரம் முடிந்துவிட்டிருக்கும்! பிறகு தீயசக்திகளின் ஆதிக்கம் உன்னைப் பீடிக்கத் துவங்கி விடும்! புரிகிறதா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"புரிகிறது சுவாமி!" என்றான் சேகர். முகம் முழுக்க திகில் படர்ந்திருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜடாமுடியுடன் அமர்ந்திருந்த அந்த மனிதர் தன் இருப்பிடத்திலிருந்து எழுந்தார். கூரிய விழிகளால் சேகரின் முகத்தை உற்று நோக்கியவாறு தன் கையில் இருந்த ஒரு யந்திரத்தை சேகரிடம் நீட்டினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இதனை வைத்துக் கொள்! துணையாக இருக்கும். நினைவில் இருக்கட்டும்! 12.33 ஒரு நொடியும் தாமதிக்கலாகாது! எச்சரிக்கை".</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
........</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஊய் ஊய் என்ற பலத்த காற்றைக் சமாளித்தவாறே அந்த காட்டுப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தான் சேகர். புழுதி பறந்து கண்களை வேறு மறைத்தது! கும்மிருட்டில் தன் மொபெட்டின் குறைவான வெளிச்சத்தில் பாதையைக் கண்டுபிடித்து வாகனத்தை விரட்டிக் கொண்டிருந்தான். அவ்வப்போது வெட்டிய மின்னலும் இவனுக்கு வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது! </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கைக்கடிகாரத்தைப் பார்த்தான். 12.15! இன்னும் கால் மணி நேரமே இருக்கிறது, ஆக்ஸிலேட்டரை முறுக்கி வேகத்தை அதிகப் படுத்தினான். கரடு முரடான ஒற்றையடிப் பாதையில் மொபெட் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தது.a</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏதோ ஒரு பெரிய கல்லின் மேல் வண்டி ஏறி இறங்கியது போலிருந்தது. அத்துடன் மொபெட்டின் எஞ்சின் உயிரிழந்து வண்டியின் வேகம் அப்படியே குறைந்து மெதுவே தன் ஓட்டத்தினை நிறுத்திக் கொண்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ச்சே! இது என்ன புது சோதனை?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மணி பார்த்தான்! 12.23! இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன! அதற்குள் கடக்க வேண்டும்! எவ்வளவு தொலைவென்று இருட்டில் கணக்கிட முடியவில்லை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதயம் குப் என்று அடைத்துக் கொண்டது. நாக்கு வறண்டு விட்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பிரதர்! ஏதும் பிரச்சினையா?" திடுக்கிட்டுத் திரும்பினான்.</div>
<div style="text-align: justify;">
இருட்டில் மசமசப்பாக உருவம் தெரிந்தது. அப்பொழுது தோன்றிய மின்னல் வெளிச்சத்தில் மனித உருவம்தான் என்று தெரியவர கொஞ்சம் நிம்மதியானான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்குள் அவனாகவே மொபைட்டை வாங்கி இரண்டே உதையில் இஞ்சினை உயிர்ப்பித்தான்.</div>
<div style="text-align: justify;">
"பிரதர்! நீங்க பதட்டமா இருக்கீங்கன்னு நினைக்கிறென்! உக்காருங்க! வண்டியை நான் ஓட்டுறேன்"</div>
<div style="text-align: justify;">
ஒன்றும் பேசத் தோன்றாமல் எதற்கோ கட்டுப்பட்டவன் போல் பின்னால் ஏறி அமர்ந்தான் சேகர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தக் காட்டுப் பாதையில் பழக்கப் பட்டவன் போல லாவகமாக அதே சமயம் இவனின் எண்ணம் அறிந்தாற்போல் வேகமாகவும் வண்டியை முடுக்கிக் கொண்டிருந்தான் அவன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எவ்வளவு தொலைவு கடந்திருப்பார்கள் என்று தெரியவில்லை! தன்னிச்சையாக கைக்கடிகாரத்தைப் பார்த்தான். 12.30! </div>
<div style="text-align: justify;">
"ஐயோ! இன்னும் மூன்றே நிமிடங்கள்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வண்டி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
தொலைவில் இலேசான வெளிச்சத்தில் பாதையின் முடிவு தெரிந்தது!</div>
<div style="text-align: justify;">
ஆ! அதோ! இன்னும் சில மீட்டர்கள்தான்! அடைந்துவிடலாம்! அவர் சொன்ன எல்லையைக் கடந்துவிடலாம்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
12.32!</div>
<div style="text-align: justify;">
இவன் எண்ணி முடிப்பதற்குள் எல்லையைத் தொடும் ஒன்றிரண்டு அடிகளுக்கு முன்னால் சட சடவென ஒரு மரம் முறிந்து விழுந்து பாதையை மூடிக் கொண்டிருந்தது. வண்டியை அந்த இடத்திலேயே நிறுத்தினான் அவன்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐயோ! சோதனையின் உச்ச கட்டம் இது! ஒரு நிமிடத்திற்குள் அவ்விடத்தைக் கடந்தாக வேண்டும்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
12.32.20!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"கவலைப் படாதீங்க பிரதர்! மரத்தைத் தூக்கிப் போட்டுட்டு போயிக் கொண்டே இருக்கலாம்!"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்ன உளறுகிறான் இவன்! பத்து பேர் சேர்ந்தாலும் தூக்கச் சாத்தியமில்லாத மரமல்லவா முறிந்து கிடக்கிறது! இறங்கி ஓட வேண்டியதுதான்" என எண்ணிக் கொண்டே வண்டியைப் பற்றிக் கவலை கொள்ளாது எல்லையை நோக்கி கண் மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தான் சேகர்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மரத்தின் அருகாமையை அடைந்தபோதுதான் கவனித்தான். மரம் மெல்ல மெல்ல மேலெழுந்து கொண்டிருந்தது! வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தவன் பத்தடி தொலைவிற்கு அப்பாலிருந்தே தன் கையை நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈட்டி அம்மரத்தை அப்புறப் படுத்திக் கொண்டிருந்தான்!</div>
</div>
நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5501938537488945128.post-5058718296075634772013-07-28T11:15:00.003-07:002013-08-03T12:42:04.656-07:00நானாக நானில்லை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எப்படியோ ஒரு வழியாக அறைக்கு நடந்தே வந்து சேர்ந்திருந்தேன்! கை காலிலெல்லாம் பயங்கர வலி! தோள் பட்டையிலும்! நல்ல வேளை ஹெல்மெட் அணிந்திருந்ததால் தப்பித்தேன். சாலைத் திருப்பத்தில் திரும்பும்போது வேகமாக வந்த லாரியில் மோதியதில் இத்தனை காயங்களும், வலிகளும்!<br />
<br />
<div style="text-align: justify;">
என் மோட்டார் பைக் என்ன கதியாயிற்று என்று கூட பாராமல் எழுந்தோடி வந்துவிட்டேன்! சட்டையெல்லாம் கிழிந்து விட்டிருந்தது. வேறு சட்டை எடுத்துக் கொண்டு மீண்டும் போய் வண்டியை எடுத்து வர வேண்டும்! கூடவே மெக்கானிக்கையும் அழைத்துக் கொண்டு போனால் சேதம் எவ்வளவு என்று பார்த்து ரிப்பேர் செய்யவும் உடனே கொடுத்து விடலாம்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அறை திறந்திருந்தது! என் அறை நண்பன் வந்துவிட்டிருக்கிறான் போலும்! அறைக்குள் அவனைக் காணவில்லை! குளியளறையிலிருந்து சத்தம் கேட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சங்கர்.." என்று குரல் கொடுத்தேன். பதிலில்லை! மீண்டும் இரு முறை பலமாக அழைத்தேன். அப்போதும் பதிலேதும் இல்லை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். உடலெல்லாம் வலி வியாபித்திருந்தது! அவன் வெளியே வந்ததும் ஒரு குளியல் போட்டுவிட்டு உடைகள் மாற்றிக் கொண்டு போக வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறிது நேரத்தில் தலையைத் துவட்டிக் கொண்டே வெளியே வந்தான் சங்கர்.</div>
<div style="text-align: justify;">
"எப்படா வந்தே..?" என்று கேட்டேன்.</div>
<div style="text-align: justify;">
காதில் வாங்காதவனாய் எங்கேயோ பார்த்தவாறு தலை துவட்டிக் கொண்டிருந்தான். அவன் எப்பொழுதுமே இப்படித்தான். ஏதேனும் சிந்தனையில் ஆட்பட்டுவிட்டால் அருகில் இருக்கும் ஆட்கள் கூடத் தெரியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவனுடைய போன் ஒலித்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஹலோ. சொல்றா அருண்" என்றான்.</div>
<div style="text-align: justify;">
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. நான் இங்கே இருக்கிறேன். என்னிடம் பேசுவது போல யாரிடம் பேசுகிறான்? உற்றுக் கவனிக்கலானேன்.</div>
<div style="text-align: justify;">
"எப்போ..?" என்றான். அவன் கையிலிருந்த துண்டு நழுவியது.</div>
<div style="text-align: justify;">
பதற்றமடைந்தவாறே</div>
<div style="text-align: justify;">
"தோ.. இப்பவே வரேன்" என்று செல்போனை அணைத்துவிட்டு பரபரவென உடைகளை எடுத்து மாட்டினான்.</div>
<div style="text-align: justify;">
"டேய் சங்கர்! எங்கே இவ்ளோ வேகமா கெளம்புறே? ஏதும் பிரச்சினையா?" என்றேன்.</div>
<div style="text-align: justify;">
அதற்குள்ளாக வாசலைத் தாண்டிச் சென்று தனது வண்டியைச் சமீபத்திருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ம்ம் வரட்டும் பிறகு பேசிக்கொள்ளலாம்" என்று நான் குளியலுக்குத் தயாரானேன். தலையெல்லாம் ஒரே வியர்வைச் சகதி! ரிலாக்ஸாகக் குளித்துவிட்டு தலையைத் துவட்டியவாறே கண்ணாடி அருகே வந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதில் என் பிம்பம் தெரியவில்லை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5501938537488945128.post-85409749519296309092013-07-28T09:07:00.003-07:002013-08-03T12:43:27.833-07:00எனக்கும் ஒரு வாசகர் கடிதம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
அன்புள்ள நாமக்கல் சிபி அவர்களுக்கு,</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
உங்கள் முன்னாள் வாசகன் எழுதுவது. என்னைப் பற்றி முதலில் கூறிக் கொள்கிறேன். என் பெயர் வத்லகுண்டு வாசுதேவன். சுருக்கமாக வ.வாசு என்று அழைப்பார்கள். இணையத்தில் ஒரு நாள் எதையோ தேடிக்கொண்டிருந்த பொழுது தங்கள் தளமான "பிதற்றல்கள்" வாசிக்க நேர்ந்தது. சுவாரசியம் மிகுந்ததாகப் படவே அன்று முதல் உங்கள் தளத்திற்கான சுட்டியை புக் மார்க் செய்து கொண்டு தினமும் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க என்பது கூட தவறு. சுவாசிக்க ஆரம்பித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்! </div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
உங்கள் எழுத்துக்களில் அப்படியொரு ரசனை, அப்படியொரு சுவாரசியம். தினந்தோறும் உங்கள் தளத்தைப் பார்வையிடாது என்னால் உறங்க முடியாது என்ற அளவிற்கு தங்கள் ரசினகாகிப் போயிருந்தேன். படித்தவற்றை நினைத்துப் பார்த்து அலுவலக நேரத்தில் திடீரென்று தனியாகச் சிரித்து சக அலுவலர்களின் விநோதப் பார்வைக்கும் ஆளாகியிருக்கிறேன்! </div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
இப்படியாக மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த என் வாழ்வில் திடீரென இடியாக இருந்தது ஒரு நாள்! அன்றிலிருந்து உங்கள் தளம் காணாமல் போயிருந்தது. என் வாழ்வே இருளடைந்து, வெற்றிடமாகி விட்டதாக உணர்ந்த நான், அன்றிலிருந்து பைத்தியமாகத் திரிந்து கொண்டிருந்தேன். நான் நானாகவே இருக்கவில்லை! கலங்கரை விளக்கம் காணாத கப்பல் போன்று தத்தளித்துக் கொண்டிருந்தேன். என்ன சார் ஆனது? ஏன் அப்படிச் செய்து விட்டீர்கள்? உங்கள் வாசகர்கள் மீது உங்களுக்கு கொஞ்சமேனும் இரக்கம் இருக்கவில்லையா? </div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
ம்ம்.சரிதான். உங்கள் சூழ்நிலை என்னவோ? யார் கண்டது! உங்களிடம் கோபித்துக் கொள்வதில் எவ்வித நியாயமும் இல்லைதான்! கடந்த நான்கைந்து ஆண்டுகளாக உங்கள் தளம் என்றேனும் காணக் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் ஏறாத கோவில் இல்லை! சுற்றாத பிரவுசிங்க் செண்டர்கள் இல்லை! இணைய இணைப்பே இல்லாத கணிணி என்றாலும் கூட முதலில் நான் பிரவுசரைத் திறந்து பிதற்றல்கள் தளத்திற்கான சுட்டியைக் கொடுத்துப் பார்ப்பதே என் வழக்கமாக இருந்தது. </div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
வான் பார்த்த நிலமாக வறண்டு கிடந்த மண் மீது கோன் பார்த்து கொட்டிய மழையாக இன்று மீண்டும் சிபி என்ற தளத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதும் என்னையுமறியாமல் "ஹூர்ரே" என்று கத்தி விட்டேன். </div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
தங்கள் பழைய படைப்புகளை அங்கே காண இயலாவிடினும் கூட உங்கள் எழுத்துக்கள் என்ற ஒன்றை இனி தினமும் நான் வாசிக்கும் வசதி உள்ளதே என்ற பேருவகையில் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். </div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
இனி உங்களுக்கு வாரமொருமுறையேனும் மடல் வரையத் திட்டமிட்டிருக்கிறேன். ஆதலால் இதனை இத்துடன் முடித்துக் கொள்கிறேன் ஒரு அன்பான கட்டளையுடன்.</div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
"மீண்டும் முன்பு போல் உங்கள் தளத்தை அழித்துவிட்டுச் சென்றுவிடாதீர்கள். எப்பொழுதும் எங்களுடன் தொடர்பில் இருங்கள் உங்கள் எழுத்துக்களின் வழியாக!"</div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
இப்படிக்கு,</div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
உங்கள் எழுத்துக்களின் வாயிலாக</div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
வாழ்ந்து வரும்,</div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
வத்லகுண்டு வாசுதேவன்! </div>
</div>
<div class="gmail_quote" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span style="font-size: xx-small;">(யாரும் எழுதாட்டி என்ன? நமக்கு நாமே திட்டத்தின் படி நானே எழுதியது)</span></div>
</div>
</div>
நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5501938537488945128.post-45239669620182877082013-07-22T10:09:00.000-07:002013-08-03T12:43:43.811-07:00ஊதி (எ) விசில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj20D5SrmAMhAxePeu5NGPbsTYjAup-4naL10hXL90kAV4YSifH1x9mg7j1tiU0fil0HASzM004V8Fe9G2RYfwcdUYNMKUHzk4e_kP_O551hBVUU-VsJ3ucGQgohQgftli0VT_CUfYKzOFH/s1600/whisitle.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="226" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj20D5SrmAMhAxePeu5NGPbsTYjAup-4naL10hXL90kAV4YSifH1x9mg7j1tiU0fil0HASzM004V8Fe9G2RYfwcdUYNMKUHzk4e_kP_O551hBVUU-VsJ3ucGQgohQgftli0VT_CUfYKzOFH/s320/whisitle.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவன் ஒரு நாள் தன் பெற்றோருடன் திருவிழாவிற்குச் சென்று வரும்போது விளையாடுவதற்கு நாலணா விலையில் உட்புறம் இலந்தைப் பழக் கொட்டை போடப்பட்ட விசில் ஒன்றை வாங்கி வந்திருந்தான். அன்று மாலை அவனுடன் விளையாட பக்கத்து வீட்டு ரமேஷ் வந்திருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவன் வீட்டில் பெரிய மரக்கட்டில் ஒன்று தாழ்வாரத்தில் போடப்பட்டிருக்கும்! அதில்தான் அவன் பெரும்பாலும் பஸ் விளையாட்டு விளையாடுவது வழக்கம்! அன்று அவன் கையில் ஊதி (எ) விசில் இருப்பதைப் பார்த்த ரமேஷ் அவனை பஸ் விளையாட்டுக்கு அழைத்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவன் சொன்னான். "சரி! நான்தான் கண்டக்டர்! நீ டிரைவர்"</div>
<div style="text-align: justify;">
ரமேஷ் : "ம்ம்! அப்போ டிரைவரே விசில் ஊதி வண்டியை நிறுத்துவார். பின் அவரே விசில் ஊதி வண்டியை ஸ்டார்ட் செய்வார்"</div>
<div style="text-align: justify;">
(ரமேஷுக்கு அந்த விசிலை வாங்கி ஊதிப் பார்க்க வேண்டும்)</div>
<div style="text-align: justify;">
அவன் : "அப்படியே ஆகட்டும். அப்போ நாந்தான் டிரைவர். நீ கண்டக்டர்"</div>
<div style="text-align: justify;">
ரமேஷ் :"அப்ப கண்டக்டர்தான் விசில் ஊதுவாராம் டிரைவர் வண்டியை ஓட்டுவாராம்"</div>
<div style="text-align: justify;">
அவன்:"அப்படின்னா முதல்ல சொன்ன மாதிரி நானே கண்டக்டர். நீ டிரைவர். ஆரம்பிக்கலாமா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சில நிமிடங்களுக்குப் பிறகு</div>
<div style="text-align: justify;">
ரமேஷ்: "நான் வெளாட்டுக்கு வரலை. வீட்டுக்குப் போறேன்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவனுக்கும், ரமேஷுக்கும் அப்போது ஆறு வயதுதான்.</div>
<div style="text-align: justify;">
அந்த அவன் யாரென்பது நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்!</div>
</div>
நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5501938537488945128.post-71549091389857789812013-07-19T11:20:00.000-07:002013-08-03T12:43:55.970-07:00குன்னுடையான் கதை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அப்போதெல்லாம் எங்களூர் அன்னமார் கோவில் வளாகத்தில்தான் குன்னுடயான் கதை நடக்கும்! நான் சொல்வது என்னுடைய 6-7 வயது இருக்கும்போது.<br />
<br />
<div style="text-align: justify;">
வீட்டிலிருந்தே கோணிப்பையை கையோடு எடுத்துச் சென்றுவிடுவோம். தரையில் விரித்து அமர்ந்து கொள்ள. இரவு உணவை முடித்துவிட்டு வீட்டைவிட்டுக் கிளம்பினால் திரும்பிவர நள்ளிரவைத் தாண்டியிருக்கும்! இதுபோல ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் போல நடக்கும்! ஊர்ச்சந்தையை அடுத்து இந்த அன்னமார் கோவில் இருக்கும்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கோவிலின் வெளியே பெரிய குதிரை மீது அய்யனாரோ/கருப்பனாரோ கம்பீரமாக வீற்றிருப்பார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குன்னுடையான் கதை என்றால் பொன்னர் சங்கர் கதைதான்! கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு வேடமிட்டுக் கொண்டு கணீர்க்குரலில் பாடி நடிப்பார்கள்! உடுக்கையொலியும் பாடலுடன் சேர்ந்து ஒலிக்கும்! சிலிர்ப்பாக இருக்கும்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தக் கூத்தில் நடிப்பவர்கள் அனைவருமே சுத்தமாக இருந்து விரதம் இருந்து நடிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டதுண்டு! வருடம் தவறாமல் வீரப்பூர் சென்று வழிபடுவார்கள் என்றும் சொல்வார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படுகளக் காட்சியென்று கடைசி நாளில் ஒரு காட்சி உண்டு. அன்று பார்வையாளர்கள் பலருக்கும் சாமி வரும்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாமக்கல்லுக்கு நாங்கள் குடிபெயர்ந்த சில வருடங்களுக்குப் பிறகு எங்கள் வீட்டருகில் இருந்த பகவதி அம்மன் கோவிலில் அந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். ஓரிரு வருடங்கள் தினந்தோறும் பார்த்திருக்கிறேன்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/8IKgR3zTH9I?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
(நாமக்கல் மாட்டம் மணியனூரில் ஒரு அண்ணமார் கோவில் இருக்கிறது. அந்தக் கோவில் வளாகத்தில்தான் நான் இந்நாடகத்தை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்)</div>
</div>
நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5501938537488945128.post-90879265281886153562013-07-14T18:09:00.001-07:002013-08-03T12:44:13.247-07:00தந்தி - என் நினைவுக் குறிப்பு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifYsJNEvWbTCDcdO0zlR5lK3nSbuikzAoAmU-mp6dYRWxbWwghHOrJN4mBnFE-6wNsJyIhM-GgVWNHxn5WMMm5NtzypWcd8fhZRQgupTXYxSHM6R3b02bLkyWr-i7SO0lHq6dAi-AFrBop/s1600/India_Last_Telegram_Vall_t618.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifYsJNEvWbTCDcdO0zlR5lK3nSbuikzAoAmU-mp6dYRWxbWwghHOrJN4mBnFE-6wNsJyIhM-GgVWNHxn5WMMm5NtzypWcd8fhZRQgupTXYxSHM6R3b02bLkyWr-i7SO0lHq6dAi-AFrBop/s320/India_Last_Telegram_Vall_t618.jpg" width="320" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருந்த சமயம். ஒரு நாள் வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் எனக்கு ஒரு கடிதம் வந்திருப்பாக எங்கள் வீட்டில் கொடுத்தனர். கவரைப் பிரித்தேன். ஒரு வெள்ளைத் தாளில் எழுதப்பட்டிருந்த கடிதமும் அதனுள் மடித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து ரூபாய்த்தாளும் இருந்தது. எனது (+1,+2)நண்பன் நவலடியான் கோவையிலிருந்து எழுதியிருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடிதத்தில் தனக்கு ஒரு தந்தி அனுப்புமாறும் அதில் அவசரமாகப் புறப்படு வருமாறு குறிப்பிடும்படியும் எழுதி இருந்தான். மேலும் அந்தத் தந்தி தனது பெற்றோரிடமிருந்து அனுப்பியதாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தான். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. ஏதேனும் பெண் பிள்ளைகள் விஷயத்தில் மாட்டிக் கொண்டானோ என்றெல்லாம் யோசித்துவிட்டு சரி இனி தாமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்து தந்தி அலுவலகத்திற்குச் சென்றேன். வழக்கமான பாணியில் ஸ்டார்ட் இம்மீடியட்லி என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் முடித்து விட்டு அவனது தந்தை பெயரில் கையொப்பமிட்டு அனுப்பி விட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டொரு வாரங்கள் கழித்து நாமக்கல்லில் அவனைச் சந்தித்தேன். அப்படியென்ன பிரச்சினை என்று விசாரித்தேன். நகைப் பட்டறைப் பயிற்சிக்காக அவனை கோவை அனுப்பியிருக்கின்றனர். அவனோ வேண்டா வெறுப்பாகச் சென்றிருக்கிறான். தங்கள் அனுமதியின்றி அவனை ஊருக்கு அனுப்ப வேண்டாம் என்று தங்கள் உறவினர் வீட்டில் சொல்லி இருக்கின்றனர் அவனது பெற்றோர். அதனால் இந்த ஐடியாவை செயல் படுத்தி இருக்கிறான். முழுதாக சொல்லி முடித்ததும் "அட! இதை கடிதத்திலேயே எழுதித் தொலைப்பதற்கு என்ன? நான் என்னவோ ஏதோ என்று பதட்டப் பட்டேன்" என்று அவனிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டேன்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டொரு வருடங்கள் கழித்து அவனது அண்டை வீட்டில் இருந்த இன்னொரு நண்பர் கபீர் முகம்மது(இவர் என்னுடன் பாலி டெக்னிக்கில் படித்த நண்பர், நவலடியான் மூலமாக அறிமுகமானவர்)வுடன் பேசிக்கொண்டிருந்த போது நவலடியானைப் பற்றி விசாரித்தேன். அவர்கள் தற்போது வீடு மாறிச் சென்று விட்டதாகவும் அவர்களுடன் அவ்வளவாகப் பேச்சு வார்த்தை இல்லை எனவும் சொன்னான். என்ன ஆச்சு என்று விசாரித்தேன். சில வருடங்களுக்கு முன்பு கோவையில் இருந்த அவனை யாரோ போலித் தந்தி கொடுத்து வரவைத்ததாகவும்,அந்த வேலையைச் செய்தது இவன்தான்(கபீர் முகம்மது) செய்ததென்று நினைத்து நவலடியானின் அம்மா இவனைத் திட்டியதாகவும் கூறினான். அடப்பாவி! அதைச் செய்தது நானாச்சே! நீ மாட்டிக் கொண்டாயா என்று கேட்டுவிட்டுச் சத்தமாகச் சிரித்தேன்!</div>
<div style="text-align: justify;">
</div>
</div>
நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5501938537488945128.post-72604786588705466472013-06-30T12:09:00.001-07:002013-06-30T12:09:19.083-07:00வாழ்க்கை ஒரு கோப்பை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கனவுகள் நிறைந்த<br />
மதுக் கோப்பையாகிக்கொண்டிருந்தது<br />
என் வாழ்க்கை!<br />
ஒவ்வொரு சிப்பிலும்<br />
கனவுகள் குறைந்து<br />
கொண்டே இருந்தன!<br />
ஒவ்வொரு சிப்பிலும்<br />
கவிதைகள் பிறந்தவண்ணம்<br />
இருந்தன!<br />
<br />
இலக்குகள்<br />
ஏதுமின்றி<br />
நீண்டதொரு பயணமாய்<br />
இருக்க வேண்டுமென்று<br />
விரும்பி<br />
வாழ்க்கைப் பாதையை<br />
அவ்வப்போது<br />
மாற்றிக் கொண்டேயிருக்கிறேன்!<br />
<br />
திட்டமிடப்படா<br />
திசைகளாய் இருக்கவேண்டுமென்ற<br />
என் திட்டங்கள்<br />
தவிடு பொடியாகிக் கொண்டிருக்கின்றன<br />
எதிர்பாராத எதிரிகளால்!<br />
<br />
<br /></div>
நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5501938537488945128.post-24826653826435844312012-07-01T04:46:00.002-07:002012-07-01T04:49:29.514-07:00வார்த்தை விளையட்டுஇரு விழி<div>தொடு வானம்</div><div>ஒற்றைச் சிறகு</div><div>மரத்தடி</div><div>தூறல்</div><div>கற்பனை</div><div>பட்டினி</div><div>கண்ணாடிச் செருப்பு</div><div>காதல்</div><div>பின்னிரவு</div><div>தொடர்தல்</div><div>நிலவு </div><div>மொழி</div><div>கூந்தல்</div><div>பட்டாம்பூச்சி</div><div>அடடா! </div><div>அற்புதமான கவிதை</div><div>என்றான் நண்பன்!</div><div>வார்த்தை விளையாட்டுக்காக</div><div>எழுதி வைத்திருந்த</div><div>சொற்களைப் பார்த்து!</div>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5501938537488945128.post-56522954715190503802012-07-01T00:39:00.002-07:002012-07-01T00:52:02.830-07:00மீண்டும்....!எப்படியோ ஒரு வழியா மீண்டும் பிளாக் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்!<div><br /></div><div>என்ன எழுதுவேன், எப்படி எழுதுவேன்னு எனக்கே தெரியாது! </div><div><br /></div><div>ஆனா எழுத வேண்டிய நேரத்துல கரெக்டா எழுதுவேன்! </div><div><br /></div><div>பழைய ஃபார்முக்கு வர கொஞ்ச நாள் ஆகலாம்! </div><div><br /></div><div>அதுவரைக்கும் வெயிட்டீஸ்! </div><div><br /></div><div>இது ச்சும்மா ஸ்டார்ட்டிங்க் போஸ்ட்தான்! </div><div><br /></div><div><br /></div><div>விரைவில்,</div><div>அமளிதுளியாக்கும் ஆவலுடன்,</div><div>உங்கள்,</div><div>நாமக்கல் சிபி.</div>நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0